INSAT-3DS புவிநிலை சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தம் - இஸ்ரோ தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

'இன்சாட்-3டிஎஸ்' செயற்கைகோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கென வடிவமைக்கப்பட்ட இன்சாட் -3 டிஎஸ் செயற்கைகோள்  கடந்த 17-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்தநிலையில் 'இன்சாட்-3டிஎஸ்' செயற்கைகோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள் பூமியை ஒரு முறை சுற்றி வர 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day