"8 மாதங்களில் 2 முயற்சிகள்" - எலான் மஸ்கை கொல்ல சதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த 8 மாதங்களில் தன்னை கொல்ல 2 முயற்சிகள் நடைபெற்றதாகவும் இதில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

அமெரிக்‍க அதிபர் தேர்த​லில் போட்டியிடும் குடியரசுக்‍ கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது 20 வயது இளைஞர் துப்பாக்‍கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ள ​உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்த 8 மாதங்களில் தன்னைக் கொல்ல 2 முயற்சிகள் நடந்ததாகவும், 2 பேர் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர் என்றும் டெஸ்லா சி.இ.ஓ. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து அவரை எக்ஸ் தளத்தில் பின்தொடருபவர்கள் பலரும் எலான் மஸ்க்‍ தனது பாதுகாப்பை பலப்படுத்திக்‍ கொள்ள வேண்டும் என கேட்டுக்‍கொண்டுள்ளனர். 

Night
Day