'இந்தியாவில் நடைபெறும் 'க்வாட்' மாநாட்டில் பங்கேற்பேன்' - ஜோ பைடன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ‘க்வாட்’ நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘க்வாட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு கடந்த ஆண்டு மே மாதம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது.  இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இந்த மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Night
Day