'2025 ஜி 7 மாநாட்டிற்கு மோடியை அழைப்பது குறித்து அந்த நேரத்தில் முடிவு' - ட்ரூடோ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டிற்கு இந்தியப் பிரதமரை அழைப்பது குறித்து அந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காலிஸ்தானி பிரிவினைவாதி கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியா-கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஜி 7 உச்சி மாநாடு கனடாவில் நடைபெற உள்ளது. அதற்கு இந்திய பிரதமர் மோடி அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ட்ரூடோ, அடுத்த ஆண்டு  G7 தலைமைப் பதவிக்கு கனடா வந்தவுடன் இது குறித்து கூறப்படும் எனத் தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு முன் இத்தாலியில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day