அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்திய மாணவர் மீது கொலை வெறித்தாக்‍குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்த அமெரிக்க வாழ் இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி என்பவர், சிகாகோவில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து வெஸ்லியான் பல்கலைகழகத்தில் படித்து வருகிறார். இவர், வழக்கம்போல் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்மநபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் சையத் மசாஹிர் அலியை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடமிருந்த பணம், மொபைல் போனை உள்ளிட்டவைகளை பறித்துக்‍ கொண்டு தப்பியோடியுள்ளனர். ரத்த காயங்களுடன் இருக்கும் மாணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day