அமெரிக்காவில் ஹரியானா மாணவர் சுத்தியால் தாக்கி கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில், ஹரியானா மாணவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஜார்ஜியாவின் லித்தோனியா நகரில் உள்ள ஒரு கடைக்குள் இந்தியாவைச் சேர்ந்த 25 வயது மாணவர் விவேக் சைனி சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதற்கு அட்லாண்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம்,  தனது X வலைதளத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதில், இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியதுடன், தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, "நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளது.

Night
Day