அமெரிக்காவில் 70 ஆண்டுகளாக இயந்திர நுரையீரலுக்குள் உயிர் வாழ்ந்த மனிதர் மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் 70 ஆண்டுகளாக இயந்திர நுரையீரலுக்குள் உயிர் வாழ்ந்த மனிதர், உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார். 1952-ம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவரது கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் செயல் இழந்து முடங்கியதால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்ட அவருக்கு, டெக்சாஸ் மருத்துவமனையில் மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் 272 கிலோ எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியுடன் அவர் உயிர் பிழைத்தார். தொடர்ந்து 70 ஆண்டுகளாக அந்த உலோகக் கட்டமைப்பிற்குள் வாழ்ந்து வந்த அலெக்சாண்டர், கடந்த 12-ம் தேதி மரணமடைந்தார்.

Night
Day