ஆப்கானிஸ்தானில் கடும் மழை மற்றும் பனிப்பொழிவில் சிக்‍கி 39 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் கடும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். பால்க், ஜாவ்ஜான், பட்கிஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பனிப்பொழிவில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்‍கின்றன. இதுவரை 600க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பனி தொடர்ந்து நீடித்து வருவதால் சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளது. மேலும் பல மாகாணங்களில் உள்ள மக்‍களை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 

Night
Day