ஆஸ்திரேலியாவில் தொடர் கனமழை : வெள்ளப்பெருக்கில் சிக்கி இந்திய பெண் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆஸ்திரேலியாவில்  பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாகாணத்தின் மவுண்ட் இஷா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. தூதரக ரீதியான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். 

varient
Night
Day