இங்கிலாந்து நடனப்பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் - 17 வயது சிறுவன் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்தில் நடனப்பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் 17 வயது சிறுவன் பயிற்சியின் போது, திடீரென கத்தியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்தியுள்ளார். அதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 9 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதில், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, தாக்குதல் நடத்திய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில், பலியான சிறுவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Night
Day