இங்கிலீஸ் கால்வாயை கடக்க முயன்ற படகு கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடக்கு பிரான்ஸில் இங்கிலீஸ் கால்வாயை கடக்க முயன்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.

பிரான்சில் இருந்து இங்கிலாந்து நோக்கி சென்ற படகில், 60க்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆம்பிளிட்யூஸ் பகுதியில் இங்கிலீஸ் கால்வாயை கடக்க முயன்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 பேர் உயிரிழந்தனர். 53 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 10 மாத கைக்குழந்தை உட்பட 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் எரித்ரியா, சூடான், சிரியா, ஈரான், எகிப்து நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். 

Night
Day