இந்திய வம்சாவழி இளைஞரின் விளையாட்டு வினையானது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விமானத்தை வெடிக்க வைக்கப் போவதாக நண்பர்களுக்கு நகைச்சுவையாக புகைப்படம் அனுப்பிய இந்திய வம்சாவழி இளைஞர் மீது ஸ்பெயினில் விசாரணை நடைபெற்று வருகிறது. 2022 ஜூலை மாதம் பிரிட்டனைச் சேர்ந்த ஆதித்யா வர்மா எனும் இந்திய வம்சாவழி இளைஞர் ஸ்பெயினுக்குச் சென்று கொண்டிருந்தார். விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக ஸ்னாப் சாட்டில் ஒரு புகைப்படம் எடுத்து அதில் விமானத்தை வெடிக்க வைக்கப் போவதாகவும் தான் ஒரு தாலிபான் என எழுதி அனுப்பியுள்ளார். இதையடுத்து ஸ்பெயினின் எஃப்-18 ரக விமானம் வர்மாவின் விமானத்தை தரையிறங்க வைத்து அவரைக் கைது செய்தது. அவர் நகைச்சுவைக்காகத்தான் செய்தார் என்பது தெரிய வந்தாலும் நீதிமன்ற விசாரணைக்குப் பின் அதிக அபராதம் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Night
Day