இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு - 21 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் அங்கு வெள்ளத்தில் மூழ்கின. மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 7 வீடுகள் மண்ணில் புதைந்ததில் 21 பேர் உயிரிழந்த நிலையில் மாயமான நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Night
Day