இரு நாடுகளுக்கு இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வடகொரிய ராணுவ வீரர்கள் எல்லையைத் தாண்டியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியா துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா அணு ஆயுதங்களை அடிக்கடி சோதனை செய்து வரும் நிலையில், தென் கொரியா - வடகொரியா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. வடகொரியா ஆயிரக்கணக்கான பலூன்களில் தென்கொரியாவுக்கு குப்பைகளை அனுப்பியது. அதற்கு எதிராக எல்லையில் ராட்சத ஒலிபெருக்கிகளை வைத்து அந்நாட்டுக்கு எதிரான பிரசாரங்கள், K-pop பாடல்களை தென்கொரியா ஒலிபரப்பி வருகிறது. இதனால் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், வடகொரிய ராணுவ வீரர்கள் எல்லை தாண்டியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. 

varient
Night
Day