இஸ்ரேலின் பிடிவாதத்தால், நாசமாகி வரும் மத்திய கிழக்கு - ஐ.நா. கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலின் பிடிவாதத்தால் மத்திய கிழக்கில் தீ கொளுந்து விட்டு எரிவதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ்க்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க்கில், மத்திய கிழக்கின் நிலைமை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அன்டோனியோ குட்டெரஸ், மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் தீ, வேகமாக பரவி  நரகமாகி வருவதாக கூறினார். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தத்திற்கு முன்மொழிந்த போதும், இஸ்ரேல் போர் தாக்குதலை நிறுத்தவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரையும் இஸ்ரேல் படை கொன்றதாகவும் குறிப்பிட்டார்.

Night
Day