இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் - இந்திய தூதரகம் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. 

இஸ்ரேலில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து இந்தியர்களும், விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் வேண்டும் என கூறிய இந்திய தூதரகம், போர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Night
Day