இஸ்ரேல்-காசா விவகாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிய அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசா விவகாரத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரவுள்ளது. இதுவரை காசா தொடர்பாக கொண்டு வரப்படும் தீர்மானங்களில் "போர் நிறுத்தம்' என்ற வார்த்தையை அமெரிக்கா தவிர்த்து வந்தது. ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுவரை கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டிலிருந்து திடீரென மாறி, காஸாவில் இஸ்ரேல் வரம்பு மீறி தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், அந்தப் பகுதியில் பைடனின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில், காசாவில் தற்காலிகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்கா தயாரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

Night
Day