இஸ்ரேல் தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்க காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய காசாவின் நூசிரத் அகதிகள் முகாம் பகுதியில் நேற்று ஒரே சமயத்தில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலின் முடிவில், 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் படையினர் உயிருடன் மீட்டனர். இந்த மீட்புப் பணியின்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 700 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

Night
Day