இஸ்ரேல் வேவு தளம் மீது ஏவுகணை தாக்குதல் - நால்வர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் உளவு பார்க்கும் தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் கெர்மான் மற்றும் ராஸ்க் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டிவந்தது. இந்நிலையில் ஈராக்கில் செயல்பட்டு வரும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு உளவு தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள மொசாட் உளவு பார்க்கும் தளம், மற்றும் சிரியாவிலும் ஈரானின் புரட்சிகர படையினர் தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டதுடன் ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.

Night
Day