ஈராக் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு - 6 பேர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் நாட்டின் எர்பில் நகரில் அமெரிக்க தூதரகம் அமைந்த பகுதியில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் அமெரிக்‍க தூதரகம் அருகே குண்டுவெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
6பேர் படுகாயமடைந்ததாக குர்திஸ்தான் பிராந்திய பாதுகாப்பு கவுன்சில் தெ​ரிவித்துள்ளது. 
இந்த சம்பவத்திற்கு, ஈரான் நாட்டின் புரட்சி காவல் படை பொறுப்பேற்றுள்ளது. இதுபற்றி படையினர் வெளியிட்ட செய்தியில், உளவாளிகளின் தலைமையகம் மற்றும் ஈரானுக்கு எதிரான பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு, ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. 

Night
Day