உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனின் மத்திய நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

ரஷ்யா -  உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இருநாடுகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பொல்டாவா பகுதியில் உள்ள மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 51 பேர் உயிரிழந்த நிலையில், 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day