உக்‍ரைனுக்‍கு ராணுவத்தை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கத்திய நாடுகள் தங்களது ராணுவத்தை உக்‍ரைனுக்‍கு அனுப்பினால் அணு ஆயுதப்போர் ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நாட்டு மக்‍களுக்‍கு உரையாற்றிய அதிபர் புதின், ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் தொடர்ந்து முன்னேறி செல்வதாக குறிப்பிட்டார். உக்‍ரைனுக்‍கு ஆதரவு அளிப்பதாகக்‍ கூறி மேற்கத்திய நாடுகள் தங்களது ராணுவத்தை உக்‍ரைனுக்‍கு அனுப்பினால் கடும் வி​ளைவுகளை சந்திக்‍க நேரிடும் என்று புதின் எச்சரித்தார். உக்‍ரைனுக்‍காக தங்களது ராணுவத்தை மேற்கத்திய நாடுகள் அனுப்பினால் அந்த நாடுகளை ரஷ்ய ஆயுதங்கள் தாக்‍கும் என்பதை அந்த நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார். 

Night
Day