உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தால் 68 குழந்தைகள் பலியான வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவின் இருமல் மருந்தால் 68 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இந்தியர் உள்பட 23 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மேரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த டோக்-1 என்ற இருமல் மருந்து உஸ்பெகிஸ்தானில் 68 குழந்தைகளின் உயிரை பறித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தை அடுத்து அந்நாட்டில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதே சமயம் மேரியோன் பயோடெக் நிறுவனத்தின் உரிமத்தையும் மத்திய அரசு ரத்து செய்தது. உஸ்பெகிஸ்தானில் ஏழு மாதங்களாக நடைபெற்று வந்த நீதிமன்ற விசாரணையின் முடிவில் இந்தியரான சிங் ராகவேந்திர பிரதார் என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 22 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Night
Day