ஏவுகணை தாக்குதலில் 9 பேர் பலி - 29 பேர் படுகாயம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நோக்கி ரஷ்யா ஏவுகணை ஒன்றை செலுத்தியதாக கூறப்படுகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த 29 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

varient
Night
Day