ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த ஈஃபிள் கோபுரம் மீண்டும் திறப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஊழியா்களின் வேலைநிறுத்தத்தால் மூடப்பட்டிருந்த பாரீஸ் நகரின் ஈஃபிள் கோபுரம் நேற்று முதல் மீண்டும் பாா்வையாளா்களுக்காக திறக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகா் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் கோபுரம் சா்வதேச சுற்றுலாத் தலமாக உள்ளது. இந்தக் கோபுரம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் சுமார் 200 ஊழியர்கள் பராமரித்து வருகின்றனா். இவா்கள் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இதனால் ஈஃபிள் கோபுரம் மூடப்பட்டது. இந்தநிலையில் ஊழியா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதால் ஈஃபிள் கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Night
Day