கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இமான் மீன்பிடி கப்பல் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து இமான் என்ற ஈரான் மீன்பிடி கப்பலை இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா, பத்திரமாக மீட்டுள்ளது. சோமாலியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் ஈரானின் கொடியுடன் கூடிய மீன்பிடி கப்பலான இமான் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.  இதனையடுத்து போர்க்கப்பலில் இருந்த ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள், கடத்தப்பட்ட கப்பலை சுற்றி வளைத்து அதில் இருந்த கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தன. இதனையடுத்து, இமான் கப்பல் மீட்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

Night
Day