கடும் விளைவுகளை சந்திக்‍க நேரிடும்: இஸ்ரேல் எச்சரிக்‍கை!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் தாக்‍குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்‍க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரிக்‍கை விடுத்துள்ளது. கடந்த வாரம் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரோல் எல்லையில் தொடர் தாக்‍குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் ராணுவமும் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல், காஸாமுனையில் தாக்‍குதலை நிறுத்தும் வரை தாங்கள் தொடர்ந்து தாக்‍குதல் நடத்துவோம் என ​ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் தாக்‍குதல் நடத்தி வருவதாகவும், இதனால் லெபனான் எல்லையில் மட்டுமின்றி அந்த பிராந்தியம் முழுவதும் பேரழிவை சந்திக்கும் என எச்சரித்தார். 

Night
Day