கணவரிடம் இருந்து விவாகரத்து கோரிய மகளின் கால்களை வெட்டிய தந்தை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் விவாகரத்து கோரிய மகளின் இரு கால்களை, தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து கோடாரியால் வெட்டினர். குல் டவுனில் வசித்து வரும் சோபியா படூல் ஷா என்பவருக்கு விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால் கணவரிம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இது தங்களின் குடும்பத்துக்கு அவமானம் ஏற்படுத்தியதாக கூறி, சோபியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் இணைந்து, இளம்பெண்ணின் கால்களை கோடாரியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையல், தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

Night
Day