கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 257 பேர் அதிகரிப்பு!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எத்தியோப்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 500ஆக உயரக்கூடும் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு எத்தியோப்பியாவின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. ஆனால் அதிகப்படியான உடல்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்தள்ளது. மேலும் காணாமல் போனவர்களை மீட்புப் படையினர் தேடி வருவதால், பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

Night
Day