கராச்சி தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கராச்சியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே நேற்று குண்டு வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனப் போலீஸ் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் பலுசிஸ்தான் மாகாணத்தில் 10 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு சவால்கள் இருந்தபோதும் திட்டமிட்டபடி வரும் 8-ம் தேதி தேர்தல் நடத்துவதற்கு முழுமையாகத் தயார் நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day