கருங்கடலில் ரஷ்ய போர்க்‍கப்பலை உக்ரைன் தாக்கி அழித்ததாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கருங்கடலில் ரஷ்ய போர் கப்பலை உக்ரைன் தாக்கி அழித்தாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கி இன்றோடு 721 நாட்கள் ஆன நிலையில், போர் தீவிரமாக இல்லை என்றாலும் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கிரிமியா - உக்ரைன் எல்லையை ஒட்டிய கருங்கடல் பகுதியில் ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான சீசர் குனிகோவ் எனும் போர்க்கப்பலை உக்ரைன் படை தாக்கி அளித்ததாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கருங்கடல் பகுதிகளில் ரஷ்ய போர்க்கப்பல்களின் தலையீடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எல்லைகளை பாதுகாக்கும்  நடவடிக்கையாக ரஷ்ய போர்க்கப்பலை உக்ரைன் அழித்துள்ளது.

Night
Day