கலிஃபோர்னியாவில் குழந்தைகளுடன் இந்திய தம்பதி சடலமாக மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சான் மேடியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த சுஜித்-பிரியங்கா தம்பதியும், அவர்களது இரண்டு குழந்தைகளும் வசித்து வந்துள்ளனர். நேற்று நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, குளியலறையில் தம்பதி இருவரும், அவர்களது குழந்தைகளும் சடலமாக கிடந்தனர். மேலும், அங்கிருந்து கைத்துப்பாக்கி மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், கொலையா?,  தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day