காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை தெருநாய்கள் தின்று வருகிறது - ஃபாரெஸ் அஃபானா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை தெருநாய்கள் தின்று வருவதாக  வடக்குப் பகுதியில் உள்ள அவசரகால சேவைகளின் தலைவரான ஃபாரெஸ் அஃபானா தெரிவித்துள்ளார். இதனால், உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை அல்லது வாழ்க்கையின் அடையாளங்களை பிரதிபலிக்கும் அனைத்தையும் இஸ்ரேல் அழித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7 தொடங்கி தற்போது வரை இஸ்ரேல் தாக்குதலில் 42 ஆயிரத்து 409 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 99 ஆயிரத்து 153 பேர் காயமடைந்துள்ளனர்.

Night
Day