காசா மக்களுக்கு விரைவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காசா மக்களுக்கு அமெரிக்க ராணுவம் மூலம் வான்வழியாக நிவாரணப்பொருட்கள் விரைவில் வழங்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த போரால் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், 100க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், காசாவில் அமெரிக்க ராணுவம் வான்வழியாக நிவாரணப்பொருட்களை காசா மக்களுக்கு விரைவில் வழங்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Night
Day