சிங்கப்பூர் கப்பல் மோதியதில் இடிந்து விழுந்த அமெரிக்‍க பாலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கப்பல் மோதி நொறுங்கி விழுந்த அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள 
பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம்  2 மாதங்களில் புதுப்பிக்‍கப்பட்டு மீண்டும் திறக்‍கப்பட்டுள்ளது.
மேரிலாண்ட் மாகாணம்  பால்டிமோர் நகரில் டாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த மார்ச் 26-ந் தேதி சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று அதன்மீது மோதியது.
இதில் பாலம் உடைந்து ஏராளமான கார்கள் ஆற்றில் விழுந்தன. மேலும் 6 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த பாலம் உடனடியாக மூடப்பட்டது. அதனை சரிசெய்யும் பணி 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. அங்கு சுமார் 50 ஆயிரம் டன் இரும்பு பொருட்கள் அகற்றப்பட்டன. சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பால்டிமோர் பாலம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

Night
Day