சிலி : காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64-ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிலி நாட்டில் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 92 இடங்களில் பற்றிய தீயால் இதுவரை 43 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு நாசமான நிலையில். வினா டெல் மார் நகரைச் சுற்றி மிக அதி தீவிரத்துடன் தீ எரிந்து வருகிறது. இதில் 1931 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புகழ்பெற்ற தாவரவியல் பூங்கா எரிந்து நாசமானது. மேலும் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதையடுத்து கடற்கரை சுற்றுலா நகரங்களான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் பிறப்பிக்கப்பட்ட  அவசர நிலை பிரகடனம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Night
Day