செங்கடலில் இந்தியா நோக்கி வந்த கப்பல் மீது தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்த கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த 4 மாதத்திற்கு மேலாக தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே, செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் வணிக கப்பல்களை ஹவுதி அமைப்பு குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்ஒரு பகுதியாக நேற்று இரண்டு வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து இந்தியா நோக்கி வந்துக் கொண்டிருந்த வணிக கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

Night
Day