ஜாம்பியா நாட்டில் காலரா நோய்க்‍கு 600 பேர் உயிரிழந்ததாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜாம்பியா நாட்டில் காலரா நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை சுமார் 600 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், காலரா நோயைத் தடுப்பதற்கான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பிவைத்துள்ளது. குடிநீரைத் தூய்மைப்படுத்தும் ரசாயனப் பொருட்கள், குளோரின் மாத்திரைகள், காலரா நோய்த் தடுப்பு மருந்துகள் உட்பட 3 புள்ளி ஐந்து டன் எடையுள்ள பொருட்கள் ஜாம்பியாவுக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளன. 

Night
Day