ஜார்ஜ் போடப்பட்டிருந்த லேப்டாப் பேட்டரி வெடித்து விபத்து!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த லேப்டாப் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில்  2 சிறார்கள் உயிரிழந்தனர். பைசலாபாத்தில் உள்ள ஷிரீப்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சார்ஜ் போட்டப்பட்டிருந்த லேப்டாப் பேட்டரி திடீரென வெடித்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றியது. இதில் வீட்டில் இருந்த 9 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுமியும், சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Night
Day