ஜெர்மனி: 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 62 வயது முதியவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

62 வயதான ஜெர்மன் நபர் ஒருவர் 200 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவகாரம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட 62 வயது நபரின் நோய் எதிர்ப்பு சக்தியும் நல்ல விதமாக இருப்பதும் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மருத்துவம் சார்ந்த ஊடகம் ஒன்றில் இத்தகவல் வெளியான நிலையில் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபரை ஆய்வில் ஈடுபடுத்திக்கொள்ள வருமாறு விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். விஞ்ஞானிகளின் கோரிக்கையை ஏற்று 200 முறைக்கும் மேலாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவரும் ஆய்வு நடத்திக்கொள்ள சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day