டிராவிட், ரோகித் சர்மா, கோலி, ஜடேஜாவுக்கு உலக கோப்பை அர்ப்பணிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வெற்றியை ராகுல் டிராவிட், ரோகித் சர்மா, விராத் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி 5 ஓவர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார். இதில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தள்ள ஜெய் ஷா, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவையே அடுத்த இலக்கு என்றும் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் இந்த இரண்டு பட்டங்களையும் இந்திய அணி வெல்லும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day