தாக்‍குதலால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்‍க நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் : ஈரான், பாகிஸ்தான் நாடுகளுக்‍கு சீனா அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரான், பாகிஸ்தான் நாடுகள் தங்களிடையிலான பதற்றத்தை தணிக்‍கும் நடவடிக்‍கையில் ஈடுபட வேண்டும் என்று சீனா அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து ​சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ஐ.நா. சாசனத்தில் கூறப்பட்டுள்ள சர்வதேச உறவுகள் குறித்த விதிமுறைகளுக்‍கு ஏற்ப இரு நாடுகளும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்‍க வேண்டும் என்று கேட்டுக்‍கொண்டார். 

Night
Day