தாயகத்தை விட்டு செல்ல நான் மலாலா இல்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனது தாயகத்தை விட்டு செல்வதற்கு தான் மலாலா இல்லை என்றும், இந்தியாவில், தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய காஷ்மீர் பெண் பத்திரிகையாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சங்கல்ப் திவாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய காஷ்மீர் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான யானா மிர், தனது தாயகமான இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில், தான் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாகவும், தான் ஒருபோதும் ஓடிப்போய் இங்கிலாந்து நாட்டில் அடைக்கலம் தேட வேண்டியதில்லை என்றும் பேசினார். 

Night
Day