தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 23 ஆக அதிகரித்துள்ளது. தாய்லாந்​து நாட்டின் முவாங் மாவட்டம் தாம்பன் சலாகாவில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கு இருந்த பணியாளர்கள் ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் 22 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் ​அனுமதிக்‍கப்பட்டனர். இதில் ஒருவர் இறந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 23 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் மேலும் 10 பேரை காணாததால் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை அதிகரிக்‍கும் என அஞ்சப்படுகிறது.

Night
Day