தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாக். ராணுவ வீரர்கள் பலி!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ராணுவத்தினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது லக்கி மார்வார்ட் நகரில் சென்றபோது ராணுவ வீரர்களின் வாகனத்தை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 

7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் செரீஃப், நாட்டிலிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பதே இலக்கு என சூளுரைத்துள்ளார்.

Night
Day