துருக்கியில் தேவாலயத்துக்குள் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துருக்கியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தேவாலயத்துக்குள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரார்த்தனைக்கு வந்த ஒருவர் கொல்லப்பட்டார். இஸ்தான்புல் நகரில் உள்ள சாந்தா மரியா கத்தோலிக்க தேவாலயத்துக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பிரார்த்தனைக்கு வந்த ஒருவர் பலியானார். துப்பாக்கி சூடு நடத்திய இரு முகமூடி நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்த அந்நாட்டு போலீசார், அவர்கள் இருவரும் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து இஸ்தான்புல் நகரில் அதிரடியாக ரெய்டு நடத்திய போலீசார், சந்தேகத்துக்கிடமான 47 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day