தென்கிழக்கு பிரான்சில் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி - பலர் மாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்கிழக்கு பிரான்சில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் கார்ட் என்ற பகுதியில், வெள்ளம் சூழ்ந்துள்ள பாலத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிலர் அடித்து செல்லப்பட்டதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் அனைவரையும் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் மூழ்கியதால் இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். 

Night
Day