தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்- பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எத்தியோப்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. எத்தியோப்பியாவில் இந்த ஆண்டு பெய்த கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமானோர் புதைந்தனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 229 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. 

Night
Day