நடப்பாண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான நோபல் பரிசு கடந்த 7-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவின் ஜெஃரி இ ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு, கணக்கீட்டு புரத வடிவமைப்பிற்காக டேவிட் பெக்கருக்கும் மற்றொரு பாதியை புரத அமைப்பு கணிப்புக்காக டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜன் எம்.ஜம்பர் ஆகியோருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day