நடுவானில் குலுங்கிய விமானம் - பயணி ஒருவர் உயிரிழப்பு - 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதில் பயணி ஒருவர் உயிரிழந்தார். 30 பேர் காயமடைந்தனர்.

211 பயணிகளுடன் லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகளுக்கு விமான ஊழியர்கள் உணவு வழங்கிக் கொண்டிருந்தனர். மியான்மர் வான் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் விமானம் பயங்கரமாக குலுங்கியதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்போது விமானத்தில் இருந்தவர்களுடன் உள்ளே இருந்த பொருட்களும் தூக்கி வீசப்பட்டன. இதையடுத்து பாங்காக்கில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் லண்டனை சேர்ந்த 73 வயது பயணி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 30 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Night
Day